Home செய்திகள் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் கல்வி மாமேதை மெளலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்த தினம்

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் கல்வி மாமேதை மெளலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்த தினம்

by mohan

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மெளலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்ததினம் தேசிய கல்வி தினமாக நவம்பர் 11-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.அபுல் கலாம் ஆசாத் கல்வியின் முன்னோடியாக திகழ்ந்தவர். ஆரம்பக் கல்வி தாய் மொழியிலேயே இருக்க வேண்டும் என்றவர் ஆசாத்.தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சிலை வலுவான அமைப்பாக மாற்றினார். 1951-ல் கோரக்பூரில் இந்திய தொழில்நுட்ப பயிலகம் (ஐஐடி) அமைக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து மும்பை, சென்னை, கான்பூர், தில்லி ஆகிய நகரங்களிலும் ஐ.ஐ.டி.கள் அமைக்கப்பட்டன. பல்கலைக்கழக மானியக் குழுவை 1956-ல் ஆசாத் அமைத்தார்.

மேலும் அரபு, உருது, பார்சி ஆகிய மொழிகளில் மௌலானா அபுல் கலாம் ஆசாத் பல நூல்களை எழுதியுள்ளார். குர்ஆனை அரபு மொழியிலிருந்து பார்சி மொழிக்கு மொழிபெயர்த்தார். 1977ல் சாகித்திய அகாடமி இதனை ஆறு பகுதிகளாகப் பிரசுரித்தது.மௌலானா அபுல் கலாம் ஆசாத் அற்புதமான ஒரு மனிதர். தனது வாழ்வின் இறுதி வரை (22.12.1958 ) இந்து – முஸ்லிம் ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டார். தேச பக்திக்கு அபுல் கலாம் ஆசாத் முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார்.இவருக்கு நட்டின் உயரிய ‘பாரத ரத்னா’ விருது 1992-ல் மறைவுக்குப் பிந்தையதாக வழங்கப்பட்டது. மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த தினமான நவ. 11-ம் தேதி இன்று தேசிய கல்வி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!