5
நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுகாவிற்கு உட்பட்ட ரேலி காம்பவுண்ட் பகுதி சாலையில், குன்னூர் நகராட்சி துறையால் இந்த இடத்தில் குப்பைகள் கொட்டகூடாது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பலகையை பார்த்துக்கொண்டே தான் இந்த இடத்தில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். தூய்மை இந்தியா திட்டம் சிறப்பாக? செயல்பட்டு வரும் நிலையில் இந்த பகுதி பொதுமக்களுக்கு குப்பைகள் கொட்டுவதற்கு வேறு இடம் இல்லையா?அல்லது குப்பை தொட்டி இல்லையா?அரசின் அறிவிப்பு பலகை வைத்தும் அதனை மீறி குப்பைகளை சாலையில் கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்துபவர்கள் மீது குன்னூர் நகராட்சி துறை நடவடிக்கை மேற்கொள்ளுமா எனசமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நீலகிரி,ரமேஷ்
You must be logged in to post a comment.