வண்டு கடித்து அதிமுக பிரமுகர் பலி.!

புதுச்சேரி அரியாங்குப்பம் மணவெளி பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் புதுச்சேரி மாநில அதிமுக செயலாளராக இருந்து வந்தார். மேலும் மணவெளி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.இந்நிலையில், இவர் விழுப்புரம் மாவட்டம் ராதாபுரம் பகுதியில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்துக்கு சென்றபோது அவரை விஷவண்டு கடித்ததாக தெரிகிறது. இதையடுத்து மயங்கி விழந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..