ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகே கழிவு ஆயிலில் தீ

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சாலை பசுமலையில் உள்ள ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகே கழிவு ஆயில் தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது.       தகவல் அறிந்த மதுரை தீயணைப்புத்துறையினர் தீ தடுப்பு அதிகாரி  வெங்கடேசன்  குழுவினர் விரைவாக ரசாயனம் கலந்த நீரை பாச்சி தீயை அணைத்ததால் பெட்ரோல் பங்கிற்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. விரைவாக வந்து துரிதமாக செயல்பாட்டால் அருகே பள்ளி மற்றும் வங்கிகள் இருப்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீயணைப்புத்துறை அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..