Home செய்திகள் மதுரை – பல ஆண்டுகளாக மூடப்படாத ஆழ்துளைக் கிணறு. கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் .

மதுரை – பல ஆண்டுகளாக மூடப்படாத ஆழ்துளைக் கிணறு. கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் .

by mohan

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 75 ஆவது வார்டு மாடக்குளம் மெயின் ரோடில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி அருகே மூடப்படாத ஆழ்துளை கிணறுஉள்ளது.. 3ஆண்டுகளுக்கு முன் ஆண்டுகளுக்கும் மேல் இந்த கிணறு தோண்டப்பட்டு அதில் தண்ணீர் வராததால் மூடாமல் உள்ளது. இதில் இதற்குப் பெயர் அளவில் கிழிந்துபோன சாக்கு ஒன்றும் மற்றும் ஒரு சட்டையும் வைத்து மூடி வைத்துள்ளார்கள் இதனால் குழந்தைகள் தவறி உள்ளே விழ அதிக அளவு வாய்ப்புகள் உள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு உடனடியாக இந்த ஆழ்துளை கிணற்றை முற்றிலும் அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

செய்தியாளர்.வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!