சிவகாசி அருகே நதிக்குடியில் அபிரூபன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையின் ராக்கெட் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. தீபாவளி நெருங்கி வருவதால் பட்டாசு தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில் ராக்கெட் பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட உராய்வு காரணமாக ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்தனர். பட்டாசு தயாரிப்பு ஒரு அறை சேதமடைந்தது. இதனை தொடர்ந்து அங்கிருந்த சக தொழிலாளர்கள் விபத்தில் படுகாயமடைந்த கணேசன், சுதா, முருக சரஸ்வதி ஆகிய 3 பேரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மேலும் தீ பரவாமல் இருக்க பட்டாசு தயாரிப்பு அறைகளில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.வெடி விபத்து தொடர்பாக மாரனேரி காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.