5
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வேந்தோணி தொட்டிச்சி அம்மன் காலனி ராமையா மகன் அத்வானி,19. மதுரையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இன்று 19.10.18 காலை இவர்,செல்போனில் பாட்டு கேட்டபடி ரயில் பாதையில் நடந்து சென்றார். வேந்தோணி ரயில்வே கேட் பகுதியில் சென்றபோது, ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை சென்ற பயணிகள் ரயில் மோதி சம்ப இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ராமேஸ்வரம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.