Home செய்திகள் பாஜக., ஆட்சிக்கு இந்துத்துவா பேசுவோர் மட்டுமே துணை : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் பேச்சு

பாஜக., ஆட்சிக்கு இந்துத்துவா பேசுவோர் மட்டுமே துணை : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் பேச்சு

by mohan

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் மத சார்பற்ற கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற இந்திய யூனியன் முஸ்லீக் கவுரவ ஆலோசகர் கே. நவாஸ் கனி 1.40 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இராமநாதபுரம் தொகுதியை 52 ஆண்டுகளுக்கு பிறகு வென்ற நவாஸ் கனிக்கு , இராமநாதபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பாராட்டு விழா மற்றும் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் இராமநாதபுரத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் வருசை முகமது தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முகமது பைசல் வரவேற்றார்.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜஹான், திமுக., தீர்மானக்குழு இணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வ. சத்தியமூர்த்தி,மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவரும், வழக்கறிஞருமான ஆ.ரவிச்சந்திர ராமவன்னி, இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் முருகபூபதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலர் முஹமது யாசின், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வி. வி.வேலுச்சாமி, திமுக., தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.அஹமது தம்பி உள்பட பலர் பேசினர். நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனி ஏற்புரை ஆற்றினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் பேசியதாவது: இன்றைய இந்தியாவில் 4,636 சமூக வகுப்புகள் உள்ளன. ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒவ்வொரு நம்பிக்கை, கலாசாரம், தனி அடையாளம், சடங்கு , சம்பிரதாயம் உள்ளன. திருமண முறைகள் மாநிலத்திற்கு, மாநிலம் மாறுபடும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது. பல்வேறு மொழி, ஜாதி உள்ளிட்ட கட்டமைப்புகளை ஒருங்கிணைக்கும் ஜனநாயக நாடான இந்தியா வேற்று முறையாக இருக்கக்கூடாது. ஓட்டு முறையாக இருக்க வேண்டும் என அண்ணா கூறியுள்ளார். தமிழக முதல்வர்கள் மறைந்த எம்ஜிஆர், ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரும் ஜனநாயக முறையை பின்பற்றினர். இந்திய தேசத் தலைவர்கள் காந்தி, நேரு, அம்பேத்கர், அபுல் கலாம் ஆசாத் போன்றோரும் ஜனநாயக வழிமுறையை தான் வழிகாட்டினர்.

72 ஆண்டுகளாக ஜனநாயக முறையை பின்பற்றும் இந்திய அரசியல் கட்டமைப்பு, ஆட்சி முறையை ஒழித்து புதிய முறையை செயல்படுத்த பாஜக., முனைகிறது. ஒரே கட்சி ஆட்சி, சிறுபான்மையினர் மீதான அடக்கு முறையை பாஜக., நீங்கலாகஅனைத்து அரசியல் கட்சியினரும் எதிர்க்கின்றனர்.பசு பாதுகாப்பு என்ற பெயரில் சிறுபான்மை மக்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுகின்றனர். பாஜக., ஆட்சிக்கு இந்துத்துவா பேசுவோர் மட்டுமே துணை நிற்கின்றனர். சிறுபான்மையினரை ஆதரிக்கும் விதமாக தலித் சமூகத்தினரும் ஒருங்கிணைந்து மதச்சார்ப்பற்ற கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட நவாஸ் கனியை வெற்றி பெறச் செய்து பாஜக., க்கு பாடம் புகட்டினர். தேர்தல் பிரசாரத்தில் இந்திய ஒருமைப்பாடு பற்றி பேச வேண்டிய பிரதமர் மோடி முஸ்லிம் வேட்பாளருக்கு வாக்களித்தால், தீவிரவாதத்திற்கு வழிவகுப்பதாக அமையும் என பேசினார். இந்து, கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என அனைவரும் மனித ஜாதியே. மரபணு ஆய்வின்படி நிறத்திற்கு அப்பாற்பட்டு மனிதர்கள் அனைவரும் ஒரே ஆணுக்கும், ஒரே பெண்ணுக்கும் பிறந்தவர்களே. முஸ்லிம்ளுக்கு பிற மதத்தினர் அனைவரும் சகோதரர்களே. இவ்வாறு அவர் பேசினார். நவாஸ் கனி, கடந்த 6 ஆண்டுகளாக மேற்கொண்டுள்ள ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் கல்விக்கான உதவி தொகையை நடப்பாண்டில் மேலும் விரிப்படுத்தியமைக்கு அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும் பாராட்டி பேசினர். மாவட்ட பொருளாளர் ரபிக்குர் ரஹ்மான் நன்றி கூறினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!