8
மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் பிரதான சாலையில் கடந்த சில நாட்களில் பெய்த மழையினால் சாலை சேரும் சகதியுமாய் மாறி உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் வாகனம் சகதிக்குள் மாட்டிக்கொண்டு கீழே விழுந்து செல்கிறார்கள்.
இது பிரதான சாலை என்பதால் வாகன போக்குவரத்து அடிக்கடி இந்த பகுதியில் இருக்கிறது .மேலும் இந்த பகுதியில் ஒரு தனியார் பள்ளியும் இயங்கி வருகிறது. இதை கவனத்தில் கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் சேறும் சகதியும் உள்ள பகுதியை சரி செய்யுமாறு பொதுமக்களும் பள்ளி மாணவ மாணவிகளும் கோரிக்கை விடுக்கின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.