7
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள வி.கோவில்பட்டி கிராமத்தில் மருதோய ஈஸ்வரமுடையார் ஆலயத்தில் சிவன் மற்றும் பார்வதி வெண்கல சாமி சிலைகள் திருடு போனதாக விக்கிரமங்கலம் காவல் நிலைய போலீசாருக்கு வந்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தியதில் விக்கிரமங்கலத்தைச் சேர்ந்த வினித்(20) என்பவன் சம்பவத்தன்று கோயிலில் சுற்றித் திரிந்ததாக தகவலின் பேரில் வினித் வெண்கல சாமி சிலைகளை திருடியதை ஒப்புக் கொண்டான். இதனையடுத்து ⚖விக்கிரமங்கலம் போலீசார் வினித்தை கைது செய்து , வெண்கல சாமி சிலைகளை மீட்டு மேற்படி நபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.