பேரிடர் விழிப்புணர்வு ஊர்வலம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில், பெரியகுளம் வட்டம் வருவாய் கிராமத்தின் சார்பில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர்கள், மற்றும் பொதுமக்கள் பங்கு பெற்ற ” வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ” சார்பில் சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினம் அனுசரிக்கப்பட்டு, பேரிடர் விழிப்புணர்வு ஒத்திகைப் பயிற்சியுடன் விழிப்புணர்வு ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டது. பெரியகுளம் வடகரை முக்கிய வீதிகளில் மாணவியர்கள் ஊர்வலமாக சென்று பொது மக்களிடம் பேரிடர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.பெரியகுளம் வருவாய் ஆய்வாளர் .ராஜகோபால் விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு தலைமை தாங்கினார்.

சாதிக்பாட்சா.நிருபர் தேனி மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..