10
முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 15/10/2019 மாலை 03.00 மணியளவில் 88வது Dr.A.P.J.அப்துல்கலாம் பிறப்பு தின நிகழ்ச்சி நடைப்பெற்றது. கல்லூரி முதல்வர் Dr.A.R.நாதிரா பானு கமால் மாணவிகளிடம் அப்துல்கலாம் அவர்கள் வறுமையில் பிறந்தாலும், தனது விட முயற்சியாலும் மனதில் உறுதியுடனும் படித்து வெற்றி கண்டவர் என்றும், பெற்றோர்களின் அறிவுரை கேட்டு அவர்களின் வழியில் நடந்தால் நாமும் வெற்றி அடையலாம் என்று தலைமை உரையாற்றினார்.
தமிழ்த் துறை உதவிப் பேராசிரியை Dr.R.நதியா அப்துல்கலாம் சாதனைகளை எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து ஆங்கிலத் துறை முதலாமாண்டு மாணவி J.ரிஷபிரிதா கலாமின் பிறப்பு முதல் இறப்பு வரை வரலாற்றை எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வை கூடுதல் நடவடிக்கைஒருங்கிணைப்பாளர் S.துர்கா ஒருங்கிணைத்தார்.
You must be logged in to post a comment.