Home செய்திகள் அப்துல் கலாம் ஐயாவின் 88 வது பிறந்தநாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழா

அப்துல் கலாம் ஐயாவின் 88 வது பிறந்தநாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழா

by mohan

அப்துல் கலாம் ஐயாவின் 88 வது பிறந்தநாளை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை தாய்மண் திட்டத்தின் கீழ்  இராஜசிங்கமங்கலம் அலிகார் சாலை தெருக்களில் மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளது.இராமநாதபுரம் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் தலைமை தாங்கி மரக்கன்றுகள் நடும் பணிகளை தொடங்கி வைத்தார்.

இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினர்களாக தீபம் இந்தியா அறக்கட்டளை நிறுவனர் மதிவாணன் , இராஜசிங்கமங்கலம் மக்கள் பாதை தன்னார்வலர்கள் சாகுல் ஹமீது, ரஜீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!