மதுரை மாவட்டம் மதுரை டவுன் தீயணைப்பு துறை சார்பாக தீயணைப்பு மேலாண் இயக்குனர் கல்யாண் குமார் உத்தரவின் பேரில் பேரிடர் மதுரை டவுன் தீ தடுப்பு அதிகாரி வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் பேரிடர் மேலாண்மை பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை பசுமலையில் உள்ள மன்னர் கல்லூரியில் மதுரை டவுன் தீயணைப்புத்துறையினர் பெண்கள் கேஸ் அடுப்புகளை எப்படி கையாள்வது தீ பிடித்தால் எப்படி தற்காத்துக்கொள்வது.
மேலும் எதிர்பாராதவிதமாக மாடி வீடுகளில் தீப்பிடித்தால் எவ்வாறு கீழே இறங்குவது மழை வெள்ள காலங்களில் எந்தெந்த பொருட்களை வைத்து பாதுகாப்பான முறையில் வெளியே வருவது என பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில் மன்னர் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் சௌராஷ்டிரா கல்லூரி மாணவ மாணவிகள் பசுமலை மற்றும் விளாச்சேரி தியாகராஜா காலனி உள்ளிட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் பெண்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.