பாம்பனில் மின்சாரம் பாய்ந்து மீனவர் பலி

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதி மீன் கம்பெனியில் எடை போட பயன்படுத்தும் மின்சார தராசை சார்ஜ் போடும் போது கசிந்த மின்சாரம் பாய்ந்து மீனவர் முகேஷ் 22 பரிதாபமாக உயிரிழந்தார். முகேஷ் உடல், பிரேத பரிசோதனைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.இச்சம்பவம் குறித்து பாம்பன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..