திருச்சி நகைக்கடை கொள்ளை குற்றவாளி செங்கம் நீதிமன்றத்தில் சரண்

திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான திருவாரூர் அடுத்த சிராத்தோப்பு பகுதியை சேர்ந்த சுரேஷ் ( 28) திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதி விக்னேஷ் பிரபு முன்பு சரணடைந்தார். சரணடைந்தவரை வேலூர் சிறையில் 15 நாட்கள் வைக்க, செங்கம் காவல் துணை கண்காணிப்பாளரிடம், குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஒப்படைத்தார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..