திருவண்ணாமலை- அடையாளம் தெரியாத மூதாட்டி மரணம்

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டி  உயிரிழந்து கிடந்தார்.திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் மூதாட்டி ஒருவர் மயங்கிய நிலையில் இருப்பதைப் பார்த்த பயணிகள், அருகே சென்று பார்த்த போது, மூதாட்டி இறந்து கிடந்தது தெரியவந்தது.தகவலறிந்த திருவண்ணாமலை போலீசார் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகதிருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மூதாட்டி மரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..