8
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவைச் சார்ந்த சின்னு என்பவருக்குச் சொந்தமான மண் சுவருடன் கூடிய ஓட்டு வீடு சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக திடீரென இடிந்து விழுந்தது. வீட்டில் குடியிருந்த நபர்கள் வெளியில் சென்றுள்ளமையால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. எனினும் வீட்டினுள் இருந்த பொருட்கள் சேதமடைந்துள்ளன. தகவல் தெரிந்து தீயணைப்புத் துறையினர், வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சாதிக்பாட்சா. நிருபர் தேனி மாவட்டம்
You must be logged in to post a comment.