தர்மபுரி மாவட்டம் வெள்ளிச்சந்தையில் துணை மின்நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது திடீரென துணை மின் நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் மின்னல் தாக்கி தீப்பிடித்தது இதனால் அதிர்ச்சியடைந்த மின்வாரிய ஊழியர்கள் இதுகுறித்து பாலக்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் அதன்பேரில் துணை அலுவலர் வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீய அணைத்தனர் மின்னல் தாக்கியதில் டிரான்ஸ்பார்மர் தீயில் எரிந்து நாசம் ஆனது இது குறித்து மாரண்டஅள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
You must be logged in to post a comment.