தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் திருவண்ணாமலை வட்டத்தின் சார்பாக சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் தோழர் P. ராதாகிருஷ்ணன் படுகொலையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.படுகொலை செய்யப்பட்ட வழக்கு தகுந்த நீதி வழங்க வேண்டும்.குற்றவாளிக்கு தகுந்த தண்டனை அளித்து இதுபோல் குற்றச் சம்பவங்கள் நிகழாதவாறு தடுக்கப்பட வேண்டும்.அவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
தலைமை K ரமணன் வட்ட தலைவர் ,வரவேற்புரை S. இரவி , வட்ட செயலாளர் நன்றியுரை ,G.கஜோந்திரன் வட்ட பொர,சிறப்புறை K பெருமாள் மாவட்ட செயலாளர் , முன்னிலை.R. கருணாநிதி ,வட்ட துணை செயலாளர் ,P. பழனி துணை தலைவர் ஆகியோர் தலைமையில் தலைமையில் ஆர்ப்பாட்டம் வெகுசிறப்பாக நடைபெற்றது.திருவண்ணாமலை வட்டத்தில் பணிபுரியும் அனைத்து தோழர்களும் மற்றும் தோழியர்களும் கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்டு திருவண்ணாமலை வட்டத்துக்கு நற்பெயரை வாங்கி தந்த தோழர்களுக்கும் தோழிகளுக்கும் திருவண்ணாமலை வட்டம் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்தியாளர் மூர்த்தி
You must be logged in to post a comment.