14 ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை உடனே துவங்க கோரி போக்குவரத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

திருவண்ணாமலை போக்குவரத்து மண்டலம் வந்தவாசி பணிமனை 1 மற்றும் 2 போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் வாயில் கூட்டம் நடத்தினர்.இதில் 40க்கும் மேற்பட்ட போக்குவரத்து பணிமனை ஊழியர்கள் கலந்துகொண்டு 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கிட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.பேச்சுவார்த்தை உடனடியாகத் தொடங்கிவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என்று போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..