போடி – தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் சிசிடிவி கேமராவை துவக்கி வைத்தார்

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் போடி நகரில் குற்றங்களை தடுக்கவும் குற்றவாளிகளை விரைவாக கண்டுபிடிக்கவும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப ரவீந்திரநாத் குமார் பாராளுமன்ற நிதியிலிருந்து  ரூபாய் 12 லட்சம் செலவில் 23  இடங்களில் 64 கேமராக்கள் போடி நகரிலும் அதேபோன்று பெரியகுளம் நகரில் 12 லட்சம் செலவில் 19 இடங்களில் 64 கேமராக்கள் வீதம் இயங்கும் அதனுடைய கட்டுப்பாட்டு அறை போடி நகர் காவல் நிலையத்திலும் பெரியகுளம் நகரில் பெரியகுளம் நகர் காவல் நிலையத்திலும் ரவீந்திரநாத் குமார்  கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்.பாஸ்கரன். கூடுதல் கண்காணிப்பாளர் மோகன் குமார் சுருளி ராஜன் டிஎஸ்பி ஆறுமுகம் முத்துக்குமார் மற்றும் ஆய்வாளர்கள் சார்ப்பு ஆய்வாளர் மற்றும் காவலர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..