குற்றத்தடுப்பு நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம்

மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்  உத்தரவுப்படி குற்றப்பிரிவு காவல் துணை ஆணையர் முனைவர்.செந்தில்குமார்  மதுரை மாநகரில் உள்ள நகைக் கடை உரிமையாளர்களுடன் நகைக்கடைகளின் பாதுகாப்பு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஜுவல்லர்ஸ் அசோசியேசன் அரங்கத்தில் கலந்தாய்வுக்கூட்டம் நடத்தினார்.

*இந்த கலந்தாய்வு கூட்டத்தில் பெரிய நிறுவனம்/கடைகளின் உரிமையாளர்களை வரவழைத்து நிறுவனம்/கடைகளின் பாதுகாப்புக்காக கீழ்க்கண்ட பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றும்படி கேட்டுக்கொண்டார்.

*CCTV கேமராக்கள் நகை கடையின் உள்புறம் வெளிப்புறமும் மற்றும் ரோட்டில் செல்லும் நபர்களை அடையாளம் காண வாகன எண்களை எளிதில் கண்டறியும்படி நல்ல தரமான கேமராக்கள் பொருத்தப்படவேண்டும்.

*இரவு நேரங்களில் வாட்ச்மேன் இல்லாத நிறுவனம்/கடைகளில் 3 முதல் 5 நிறுவனம்/கடைகளுக்கு ஒரு வாட்ச்மேன் வீதம் நியமித்து, தங்களது நிறுவனம்/கடைகளை கண்டிப்பாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

*ஒவ்வொரு நிறுவனம்/கடைகளுக்கு Safety Locker பொருத்தப்பட வேண்டும். அவ்வாறு பொருத்தப்படும் கருவிகளில் அலாரம் மற்றும் SMS Alert உடன் இருக்கும்படி பொருத்தப்பட வேண்டும்.

*ஒவ்வொரு நிறுவனம்/கடைகளுக்கு அருகில், பயன்படுத்தாத வீடு, கடை மற்றும் நீதிமன்ற நிலுவையிலுள்ள பூட்டிய கட்டிடங்களில், யாரேனும்அந்நிய சந்தேக நபர்களின் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தங்களது சரக எல்லைக்குள் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

*கண்டிப்பாக இரவு நேரங்களில் தங்கள் அலுவல் நேரம் முடிந்து நிறுவனம்/கடைகளை பூட்டிவிட்டு வீட்டிற்கு செல்லும் போது தங்கள் வசமுள்ள கண்காணிப்பு கேமராக்களை தயவுசெய்து Switch Off செய்யாதீர்கள்.

*தங்கள் நிறுவனம்/கடைகளிலிருந்து பெரிய தொகை மற்றும் விளைவுயர்ந்த பொருட்களை வெளியில் எடுத்து செல்லும்போது காவல்துறையின் உதவியை தாராளமாக நாடலாம்.

*ஆதார்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் நிரந்தர கணக்கு அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாத அறிமுகம் இல்லாத நபர்களிடம் வியாபார தொடர்பு வைத்துக் கொள்ளவேண்டாம். அவ்வாறு அறிமுகம் இல்லாத நபர்களிடம் தாங்கள் வாங்கும் நகைகள் திருட்டு நகையாக இருக்கும்பட்சத்தில் காவல்துறை தங்கள் மீது கண்டிப்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.

*தங்களது நிறுவனம்/கடைகள் முன்பு லாரிகள் அல்லது ஏதேனும் ஊர்திகள் நிறுத்தி பழுது பார்ப்பது போல் நின்றால் வாகனத்தின் பதிவு எண் உள்ளிட்ட விவரத்தை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

*தங்களது கடைகள்/ நிறுவனத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கவனத்துடனும், விழிப்புடனும் சிறப்பாக பணிபுரியவேண்டும் மேலும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுத்திடவும், குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளை கண்டறியவும் காவல்துறைக்கு உதவும்படியும் கேட்டுக்கொண்டார்.

*மேலும் மதுரை மாநகரின் அனைத்து நகைக் கடைகள்/ நிறுவனத்தின் உரிமையாளர்களை காவல் உதவி ஆணையர்கள் நேரில் வரவழைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான அறிவுரைகளை வழங்கினர்.

செய்திவி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..