Home செய்திகள் தேனி – அதிக விலைக்கு மது விற்பனை. போலிசார் அதிரடி..பாட்டில்கள் பறிமுதல்

தேனி – அதிக விலைக்கு மது விற்பனை. போலிசார் அதிரடி..பாட்டில்கள் பறிமுதல்

by mohan

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு தமிழக அரசு விடுமுறை அளிக்கப்பட்டது, ஆனால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக முதல் நாளே பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது, இதன் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன்  உத்தரவுப்படி, கூடுதல் கண்காணிப்பாளர் சுருளிராஜ் தலைமையில் உத்தமபாளையம் காவல் துணைக்கண் காணிப்பாளர் சின்னக் கண்ணு அவர்களின் மேற் பார்வையில்மதுவிலக்கு அமலாக்கத்துறை ஆய்வாளர், ஜெயக்குமார்உத்தமபாளையம் சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் முருகன், சார்பு ஆய்வாளர்கள், முனியம்மாள், ஜெயபாண்டி மற்றும் காவலர்கள் உதவியுடன் தீவிர சோதணையில் ஈடுபட்டுள்ளனர், அப்பொழுது கோகிலாபுரம் கிழக்கு வாய்க்கால் அருகேயுள்ள டாஸ்மாக் கடை அருகே தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்து 505 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது, மேலும் வழக்குப்பதிவு செய்து பதுக்கி வைத்தவர்கள் யார் என்று போலிசார் விசாரித்து வருகின்றனர்.

சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!