Home செய்திகள் இராஜசிங்கமங்கலம் பெரிய கண்மாயை போர்கால அடிப்படையில் தூர்வார கோரிக்கை:

இராஜசிங்கமங்கலம் பெரிய கண்மாயை போர்கால அடிப்படையில் தூர்வார கோரிக்கை:

by mohan

இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்கமங்கலம் பெரிய கண்மாய் தமிழகத்தின் இரண்டாவது பெரியகண்மாய் ஆகும்.இராஜசிங்கமங்கலம்கண்மாயை சுற்றி இருக்கக்கூடியஅனைத்து கிராமங்களுக்கும் இந்த கண்மாய் தான் முக்கிய நீர் ஆதாரமாக திகழ்கிறது. ஆனால் இதன்தற்போதைய நிலை சீமை கருவேல மரங்களாலும்முறையானபராமரிப்புஇல்லாததாலும் தண்ணீரை சேமிக்கமுடியாத சூழல் உருவாகி உள்ளது . இதனை கருத்தில் கொண்டு 28-05-2019 அன்று  முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு இணைய வழி கோரிக்கை இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் சார்பாக அனுப்பப்பட்டது.முதலமைச்சரின் தனிப்பிரிவு கோரிக்கை மனுவில் நூருல் அமீன் கூறியதாவது:

 கடுமையானகுடிநீர் பஞ்சத்தை தீர்க்க மழை காலத்துக்குமுன் கண்மாயை தூர்வாரி நீர் தேக்கஆதாரத்தை அதிகரிக்கசெய்துதண்ணீர் தேவையை பூர்த்தி செய்யவேண்டுமெனகோரிக்கைவைக்கப்பட்டுள்ளது.முதலமைச்சரின் தனிப்பிரிவு கோரிக்கை மனு 19-07-2019 அன்று ஏற்கப்பட்டு , சீரமைப்பு பணிக்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும்நடப்பாண்டு பொதுப்பணித்துறையின்மானியக்கோரிக்கையில் 110 விதியின்கீழ் கண்மாய் பராமரிப்பு பணிக்கு ரூ.19 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.அரசாணைமற்றும் நிதி கிடைக்கப்பெற்றவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றதகவல் அரசுசார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் 23-9-19 இரண்டு மாத காலம் ஆன நிலையில் இதுவரை தூர்வாராமல்இருப்பது பெரும் ஏமாற்றத்தை தருகிறது .இராஜசிங்கமங்கலம் பெரிய கண்மாயை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு போர்க்காலஅடிப்படையில் பணிகளை தொடங்க வேண்டுகிறேன் . கண்மாயின் கரைகளை  சுற்றி 25000 பனைவிதைகளை விதைக்கும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டுகிறேன்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!