Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை தலைமை அலுவலக திறப்பு விழா..

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை தலைமை அலுவலக திறப்பு விழா..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை தலைமை அலுவலக திறப்பு விழா பரமக்குடியில் இன்று 22-9-19 நடைபெற்றது. மக்கள் பாதை தலைமை அலுவலகத்தை முன்னாள் வருவாய் ஆய்வாளர் பரம்பை சகாயம் இராஜேந்திரன்  திறந்து வைத்தார் .ஆசிரியர் ஜான் சேவியர் பிரிட்டோ  தலைமை தாங்கினார்.  மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் நூருல் அமீன், சரவணக்குமார், ஆசிரியர்கள் சரவணன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக வழக்கறிஞர்கள் முத்துக்கண்ணன், பசுமலை, ஆசிரியர்கள் சந்தியாகு, அர்ச்சுனன்,சௌந்தரபாண்டியன், சமூக ஆர்வலர்கள் மதுரை வீரன், ராமு, சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் பிராங்க்ளின் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

மேலும் திருப்புல்லாணி ஒன்றிய பொறுப்பாளர் கிளாட்வின், மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர் ராஜ்கபூர், இராமநாதபுரம் ஒன்றிய பொறுப்பாளர் தினேஷ், முதுகுளத்தூர் ஒன்றிய பொறுப்பாளர் கனி செல்வம், இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா, நயினார்கோவில் ஒன்றிய பொறுப்பாளர் சிலம்பரசன், பரமக்குடி ஒன்றிய பொறுப்பாளர் பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இராமநாதபுரம் மாவட்ட நீரின்றி அமையாது உலகு திட்ட பொறுப்பாளர் வீரக்குமார், தாய்மண் திட்ட பொறுப்பாளர் பசுமை தினேஷ் , கொடை திட்ட பொறுப்பாளர் பாலாஜி, மாவட்ட மகளிரணி பொறுப்பாளர் கோகிலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!