ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் சவுதியில் மரணம் ஒரு மாதம் கழித்து உடல் வந்தது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீரராகவபுரம் பகுதியை சேர்ந்த சுந்தர் கடந்த 09/08/19-ம் தேதி சவுதி அரேபியாவில் பணியின் போது இறந்து விட்டார். அவரது மனைவி முத்துலட்சுமி கர்ப்பிணியாக உள்ளார். முத்துலட்சுமியின் தீவிர முயற்சியால் இன்று 12/09/19 சவுதி அரேபியாவிலிருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு பின்பு சொந்த ஊருக்கு வேன் மூலம் கொண்டு வரப்பட்டது. இதற்கு முத்துலட்சுமி அரசிடம் போராடினார்.

கே.எம்.வாரியார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..