8
வேலூர் தமிழ்நாடு அனைத்து பணியாளர்கள் சங்க கவுரவத் தலைவர் ராஜவேலு மற்றும் பொறுப்பாளர்கள் ஆட்சியரை சந்தித்து விட்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் பேரூராட்சியில் 22 பெண் தொழிலாளர்கள் அங்கு பணிபுரியும் மேஸ்திரி ரவிச்சந்திரன் மீது பாலியல் புகாரை என்னிடம் கொடுத்தனர் நான் ஆட்சியரிடம் அழைத்து சென்று விவரம் கூறினேன். நெமிலி தாசில்தார் விசாரணை செய்தார். ஆனால் மேஸ்திரி ரவிச்சந்திரன் மற்றும் செயல் அலுவலர் சம்பத் குமார் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை உடனேமேஸ்திரியை கைது செய்ய வேண்டும் செயல் அலுவலர் சம்பத் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.