குவைத்தில் இறந்த மகன் உடலை சொந்த ஊர் கொண்டு வர ஆட்சியரிடம் தாய் மனு

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரியனேந்தல் வாகை குளத்தைச் சேர்ந்த சோணை முத்து மகன் மணிகண்டன், 47. திருமணம் ஆகாதவர்.இவர் கடந்த 18 ஆண்டுகளுக்கு மேலாக , குவைத் நாட்டில் டிரைவர் வேலை பார்த்து வந்தார். இவர் செப்.9ல் இறந்து விட்டதாக குவைத் தில் இருந்து தகவல் வந்தது. மணிகண்டன் உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசின் நிவாரணம் பெற்றுத் தர வேண்டும் எனக் கோரி அவரது தாயார் சரஸ்வதி, மாவட்ட ஆட்சிரியர் வீரராகவ ராவிடம் மனு கொடுத்தார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..