திண்டுக்கல் மாவட்டம் பழனி காந்தி ரோட்டில் ஒரு ஆம்னி வேனில் திடீரென தீ பிடித்தது. பேட்டரியில் இருந்த இரண்டு வயர்கள் ஒன்றோடு ஒன்று உரசியதில் தீ பிடித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக வாகனத்தை நிறுத்தி அருகில் இருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அனைத்தனர். தகவலறிந்து சிறிது நேரத்தில் தீயணைப்பு வாகனம் விரைந்து வந்தது. அதேநேரத்தில் மார்க்கெட்டில் அதிகமான லாரிகள் நின்று கொண்டிருந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
You must be logged in to post a comment.