நாம் தமிழர் கட்சி சார்பாக பாரதியாருக்கு மலர் வணக்கம்…

மகாகவி பாரதியாரின் 98 வது நினைவு நாளை முன்னிட்டு திருநகரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திருப்பரங்குன்றம் தொகுதி கலை இலக்கியப் பண்பாட்டு பாசறை சார்பாக மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தொகுதி செயலாளர் மருதமுத்து, திருப்பரங்குன்றம் தொகுதி மூத்த நிர்வாகி ஆறுமுகம்,கலை இலக்கிய பண்பாட்டு பாசறை மதுரை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ரா.பா.முருகன், கலை இலக்கிய பண்பாட்டு பாசறை தொகுதி செயலாளர் கரிகாலன், அவனியாபுரம் பகுதி செயலாளர் முத்துமணி, இளைஞர் பாசறை தொகுதி செயலாளர் வடிவேலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..