மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 17 வது வார்டில் உள்ள முக்கிய வீதியான நாடார் புதுத்தெருவில் அதிகளவில் கடைகளும் , வணிக வளாகங்களும் இயங்கிவருகிறது. இந்நிலையில் வண்டிப்பேட்டை, நாடார் புது தெரு, விகேஎஸ் தெரு இணையும் இடத்தில் சாக்கடை வாய்க்காலில் சாக்கடை கழிவுநீர் செல்கிறது. இந்த சாக்கடை கழிவுநீரில் தினமும் காலையில் வயதான மூதாட்டி ஒருவர் சாக்கடையை கிளறிவிட்டு, அதிலிருக்கும் நீரில் தங்கம், வெள்ளி போன்றவைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தினமும் செய்து வருகிறார் என அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.இப்பகுதியில் நகைக்கடை நகை அடகுக்கடை தங்க நகை மெருகு போடும் கடைகள் அதிகளவில் இருப்பதால் சிறு குண்டுமணியளவு தங்கம் கிடைப்பதால் அதனைச் சேகாித்து விற்று தனது வயிற்றுப்பிழப்பிற்கு பாா்த்து வருவதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனா்.தள்ளாத வயதில் அரசு உதவித்தொகையை எதிா்பாா்க்கலாமலும் பிச்சை எடுக்க செல்லாமலும் தனக்குத் தொிந்த வேலையை செய்து வரும் இந்த மூதாட்டியை பாராட்டித்தான் ஆக வேண்டும்.
5
You must be logged in to post a comment.