தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள திரவியம் அறிவியல் கலை கல்லூரியில் . மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி அமுதவள்ளி . இவர்கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றார். இவரது சொந்த ஊர் நிலக்கோட்டை அருகேயுள்ள சீரங்கம் பட்டி ஆகும். கல்லூரி வளாகத்தில் உள்ள நெல்லிக்கனி மரத்தில் நெல்லிக்கனி பறிக்க முற்படும்போது முதல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதில் அவரது வலது காலில் முறிவு ஏற்பட்டது. பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பட்டார்.
சாதிக் பாட்சா.நிருபர்.தேனி மாவட்டம்
You must be logged in to post a comment.