வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் அமைந்துள்ள சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகர் திருக்கோயின் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது – ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு விநாயகரின் திருவருள் பெற்றனர். வெற்றிலைகர தெரு இஸ்லாமிய நண்பர்கள் இணைந்து கோயில்க்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் பெட்பாட்டிலில் கூல்ட்ரிங்ஸ் குளிர்பானங்கள் வழங்கினர். இதில் சிறப்பு அம்சங்கள் என்னவென்றால் கோலின் எதிரேயுள்ள முஸ்லிம் சகோதரர்கள் ஆயிரக்கணக்கான பக்தகோடிகளுக்கு இலவசமாக (ரூபாய் ஒரு இலட்சம் மதிப்பிலான) கூல்ட்ரிங்ஸ் வழங்கி 50க்கும் மேற்பட்ட முஸ்லிம் நண்பர்கள் தொண்டுடாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது….. இந்து முஸ்லிம் சகோதரர்களின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளக்கியது பாராட்டு கூறியது என பக்தகோடிகள் மத்தியில் பரப்பாக பேசப்பட்டது
5
You must be logged in to post a comment.