5
கீழக்கரை தாலுகா, ஒரு வளர்ந்த நகரத்திற்கு நிகரான பல்வேறு வணிகங்களை கொண்டது. தினமும் பல்வேறு சுற்றுப்புற ஊர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பல் வேறு அரசு பணிகளுக்காக வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.
இவ்வூரில் அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் வண்ணம் இந்தியன், சைனீஸ் மற்றும் பல் வகையான உணவகங்கள் உள்ளன. இதன் தொடர்ச்சியாக இன்று (01/09/2019) “313 டிபன் சென்டர்” என்ற சிற்றுண்டி உணவகம் வள்ளல் சீதக்காதி சாலை, ஜும்ஆ மசூதி வளாகத்தில் திறக்கப்பட உள்ளது.
இந்த நிறுவனத்தை உலக நாடுகளில் பெயர்களை குறுகிய நேரத்தில் அடையாளம் காண்பதில் உலக சாதனை படைத்த முகம்மது ஆசிக் என்பவர் திறந்து வைக்கிறார்.
இந்த உணவகத்தின் உரிமையாளர் கடந்த நோன்பு காலத்தில் சிறப்பு உணவகங்கள் செய்து, மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.