உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து பலி

மதுரை செல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பாத்திமா கல்லூரி எதிரே உள்ள பார்ச்சூன் அப்பார்ட்மெண்டில் வசித்துவரும் தொழிலதிபர் ஸ்ரீராம்  56. இவர் இன்று 31.08.19 காலை 9 மணி அளவில் முதல் தளத்தில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர் எனினும் செல்லும் வழியிலேயே அவர் பலியானார் இதுகுறித்து செல்லூர் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..