Home செய்திகள் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் அம்பாத்துறையில் அம்மா திட்டம்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் அம்பாத்துறையில் அம்மா திட்டம்.

by mohan

முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தொடங்கி வைத்த அம்மா திட்ட முகாம், தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு கிராமங்களில் நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது, இதன் ஒரு பகுதியாக  ஆத்தூர் வட்டம் அம்பாத்துறை கிராமம் மேலக்கோட்டை சமுதாய கூடத்தில் நடைப்பெற்றது. இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, ரேசன் கார்டு, முதியோர் உதவித் தொகை, மற்றும் அரசு சார்ந்த உதவிகளுக்கு மக்களிடத்தில் மனுக்கள் பெறப்பட்டன.

அம்மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வும் காணப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆத்தூர் மண்டல துணை வட்டாட்சியர் சுரேஷ் குமார், தேர்தல் துணை வட்டாட்சியர் ஜெயப்பிரகாஷ்,ஆத்தூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுகந்தி, வருவாய் ஆய்வாளர் மதிவானி, அம்பாத்துறை கிராம நிர்வாக அலுவலர் சாகிரா பானு, கீழக் கோட்டை கிராம நிர்வாக அலுவலர் ராஜலெட்சுமி, N.பஞ்சம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ், கலிக்கம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கோகுல குமார், உதவி தோட்டக் கலை அலுவலர் கலையரசன், அதிமுக ஊராட்சி செயலர் துளசி, அம்பாத்துறை கிராம உதவியாளர் ராமசாமி மற்றும் பலர் கலந்து கொண்டு மனுக்களை பெற்றுக் கொண்டனர்.இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!