திருடச்சென்ற இடத்தில் பணம் இல்லாததால் சுவற்றில் நாமம் போட்ட கொள்ளையா்கள்……

மதுரை அண்ணாநகரில் பெரியார் வீதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் ஒரு அப்பளை கம்பெனியில் நடத்திவருகிறார் ..இந்த நிலையில் நேற்று23.08.19 நள்ளிரவு நுழைந்த திருடர்கள் கம்பெனியில் இருந்த 1.5 லட்சம் மதிப்பிலான அப்பளம் தயாரிக்கக்கூடிய மின்னணு எந்திரம் மற்றும் தராசுகள் 4 பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். பணம் வைக்காததால் ஏமாற்றமடைந்த திருடர்கள் . சுவற்றில் சுவற்றில் பல இடங்களில் நாமம் போட்டு விட்டு சென்றுள்ளனர். இது குறித்து பாலசுப்ரமணியம்  மதுரை அண்ணாநகர் காவல் துறையில் புகார் செய்துள்ளார் ..

செய்தியாளர்கள் வி .காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..