கீழக்கரை ரோட்டரி சங்கம் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம்கீழக்கரை நாடார் பேட்டை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது இந்த மருத்துவ முகாமை துணை ஆளுநர் சோபா ரங்கநாதன் தொடங்கிவைத்தார்.
சங்கத்தின் பட்டய தலைவர் டாக்டர் அலாவுதீன் வரவேற்று பேசினார் இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர் முனிய சங்கர் செயலாளர் ஹஸன் பொருளாளர் செல்வ நாராயணன் ரோட்டரி உறுப்பினர்கள் டாக்டர் ராசிக்தீன் மரியதாஸ் தர்மராஜா தவமணி சிவகார்த்திக் மற்றும் சங்கரா மருத்துவமனை மருத்துவர்கள் முகாம் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டார்கள் இந்த மருத்துவ முகாமில் 150 பயனாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள் 15 நபர்கள் கண் அறுவை சிகிச்சைக்காக சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்
You must be logged in to post a comment.