மது பாட்டில்கள் விற்பனை செய்த ஐந்து நபர்கள் கைது

செல்லூர்  காவல்நிலைய உதவி ஆய்வாளர் .சோமுக்கு கிடைத்த இரகசிய தகவலை பெற்று மதுரை செல்லூர் அருள்தாஸ்புரம் பாலம் அருகில் ரோந்து சென்றபோது கணேசன்  மதுரை என்பவர் மதுவிற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பு-ஆய்வாளர் .ஐசக் சாமுவேல்  அழகர்கோயில் மெயின்ரோட்டில் ரோந்து செய்தபோது கார்த்திக் மற்றும் ஐயப்பன் ஆகிய இருவரும் மதுவிற்பனை செய்ததை கண்டுபிடித்தார். மதுரை ஜவகர்புரம் பகுதியில் முத்தையா என்பவரும் மற்றும அம்மன் சந்நிதி தெரு ஆறுமுகம்  என்பவரும் மது விற்பனை செய்வதை கண்டுபிடித்தார். மது விற்பனையில் ஈடுபட்ட ஐந்து நபர்களையும் கைதுசெய்து, அவர்களிடமிருந்து 76 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..