3
பாரதப் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும், ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில், தவறாக விமர்சிக்கும் தேசவிரோத சக்திகளை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாசிலை அருகே, புதன் அன்று நடத்தப்பட்ட ஆர்பாட்டத்திற்கு, இந்து மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் விஜயராஜ் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கொல்லிடம் சாமிநாதன், மற்றும் பாம்பாட்டி சித்தர் பாலமுருகன் ஜி ஆகியோர் சிரப்புரையாற்றினர். இந்து மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.