சிவகாசி கோட்டாட்சியர் அலுவலகத்தை தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் திடீர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மக்காச்சோள படைப்புழு தாக்குதலுக்கு தமிழக அரசு வழங்கிய முழு நிவாரணத் தொகை வழங்காமல் மிகவும் மோசமாக குறைத்து வழங்கிய வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து தமிழ் விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் நாராயணசாமி தலைமையில் விருதுநகர் மாவட்ட தலைவர் செல்வராஜ் மாவட்ட அமைப்பாளர் பாஸ்கர் ஸ்ரீராம் பாபநாசம் செல்வம் திருவேங்கட ராமானுஜம் மற்றும் ஆகியோர் உடன் விவசாயிகள் கோட்டாட்சியர்அலுவலகத்தைமுற்றுகையிட்டனர்.அதைத்தொடர்ந்து கோட்டாட்சியர் நிவாரண தொகை குறைத்து வழங்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி முழு தொகையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.