மதுரை மாவட்டம் . சிலைமான் காவல் நிலைய சரக வைகை ஆற்றில் இரண்டு டிப்பர் லாரிகளில் மணல் திருடிய நபர்களான ஜெயக்குமார் (30) ஜெயராமன் (33 ) ஆகியோரை விரகனூர் கிராமத்தை சேர்ந்த பார்த்திபராஜன் (31) அவரது நண்பர்களுடன் சேர்ந்து பிடித்து வைத்திருப்பதாக, சிலைமான் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் சிலைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தும், ஜெயக்குமார், ஜெயராமன் ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.