5
கீழக்கரை பேர்ல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 73வது சுதந்திர தின விழா கோலாகலமாக நடைப்பெற்றது. பள்ளியில் மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் மாணவி லிபிகா ஜனனி தாயார் ஜெய ரூபா தனசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று தேசியக்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்கள். பள்ளி முதல்வர் சாஹிரா பானு விழாவிற்கு தலைமையேற்றினார்கள். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன
இவ்விழாவில் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் சிராஜுதீன் மற்றும் மேலாளர் முஜீபுர் ரஹ்மான் ஆகியோர் செய்திருந்தனர்.
You must be logged in to post a comment.