கும்பிடுமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 73வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக கீழக்கரை நாடார் மகாஜன சங்கத்தலைவரும் கீழக்கரை நாடார் மெட்ரிக் கல்விக்குழு உறுப்பினர் KRT.கிருஷ்ண மூர்த்தி மற்றும் கும்பிடு மதுரை ஜமாத் தலைவர் மற்றும் பொருப்பாளர்கள், இளைஞர் சங்க தலைவர் மற்றும் பொருப்பாளர்களும் ஊர் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.
சிறப்பு பள்ளிமேலாண்மைக்குழு கூட்டம் நடத்தப்பட்டு கீழை நீயூஸ் நிர்வாகத்தின் நிறுவனர் செய்யது ஆப்தீன் முயற்சியால் பள்ளிக்கு வழங்கப்பட்ட மாணவர்கள் அமரும் சேர், வட்ட வடிவ மேஜைகள், பள்ளிக்குஸ்மார்ட் டிவி, கனிணி மானிட்டர், பிரிண்டர் வழங்கியதை பெற்றோர்களுக்கும் வந்திருந்திருந்த அனைக்கும் தெரிவிக்கப்பட்டு கீழை நியூஸ் நிர்வாகத்துக்கு பாராட்டும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது. மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டது
You must be logged in to post a comment.