8
ஆண்டிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கூட்டம் நடந்தது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்துகொண்டனர். காவல் ஆய்வாளர் சரவணதெய்வேந்திரன் தலைமையிலான போலீசார்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் சீருடையில் வாகனம் ஓட்ட வேண்டும்.போக்குவரத்திற்கு இடையூறாக ஆட்டோக்களை சாலையோரங்களில் நிறுத்த கூடாது. அதிக வேகத்தில் ஆட்டோக்களை இயக்க கூடாது. இது போன்று வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகள் அடங்கிய சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
செய்தி வி காளமேகம்
You must be logged in to post a comment.