மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கல்வி மாவட்ட அளவில் ஜீனியர் ரெட்கிராஸ் சார்பில் ஜெனிவா ஒப்பந்த நினைவு தின மணித நேய பேரணியை உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் முத்தையா தொடங்கி வைத்தார்,இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாக சென்று பேரையூர் ரோட்டில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேரணியை முடித்தனர், இந்நிகழ்ச்சியில் அரிமா சங்க செயலாளர் வினு பாலா, பத்மநாதன் ஆகியோர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர், மேலும் ஜீனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் ஒலிவாசாந்தா, மற்றும் துணை அமைப்பாளர் பிரதீப் குமார் கலந்து கொண்டு நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர், இதில் ஆசிரியர்கள் . மாணவர்கள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.