9
நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த கடையம் அருகே உள்ள கல்யாணி புரத்தை சேர்ந்தவர் சண்முக வேலு.இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன்கள் சென்னை மற்றும் பெங்களூரில் பணியாற்றி வருகின்றனர்.இந்த நிலையில் சண்முகவேலு வீட்டின் வெளியே இருந்தபோது அங்கு வந்த முக மூடி கொள்ளையர்கள் அவரை தாக்கினர். அப்போது அவரும் கொள்ளையரை திருப்பி தாக்கினார்.சண்முகவேலு திருப்பி தாக்கும் காட்சி சமூகவலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.அவாின் தைாியத்தை பலரும் பாராட்டி வருகின்றனா்.
இது குறித்து சண்முகவேலு கூறும் போது வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்றார்.இந்த நிகழ்வு அங்குள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.