மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் எதிரில் உள்ள கண்மாய் கரை பகுதிகளில் மண்ணை நேசிப்போம் மக்களை நேசிப்போம் அறக்கட்டளையின் 2ம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு 500 பனை விதைகளை சுந்தரபாண்டி ஜிகர்தண்டா படங்களில் நடித்த நடிகர் சௌந்திரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நட்டார்.
இந்நிகழ்ச்சியில் அரிமா சங்க செயலாளர் வினுபாலு, ரோட்டரி சங்கசெயலாளர் பொன்ரமேஸ், லையன்ஸ் கிளப் சங்கத்தினர் மற்றும் 58 கிராம கால்வாய் சங்கத்தினர், மண்ணை நேசிப்போம் மக்களை நேசிப்போம் அறக்கட்டளை சங்க நிர்வாகிகள் ஆகிN;யண்டனாhர்கள் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சௌந்திரராஜன் பேசுகையில் எனது சொந்த ஊரான உசிலம்பட்டியில் இயற்கையைப் பாதுகாக்கும் வகையில் பனை விதைகளை நட்டது மகிழ்ச்சியளிக்கிறது.இதே போல் பசுமை ஆர்வலர்கள் உதவியுடன் தமிழகம் முழுவதும் பனை விதைகளை நட உள்ளோம் எனக் கூறினார்.
You must be logged in to post a comment.