இராமேஸ்வரம் தீவு பகுதியில் சட்ட விரோத மது விற்பனை தடுக்கக்கோரி பெண்கள் முற்றுகை

இராமேஸ்வரம் புலித்தேவன் நகரில் சட்ட விரோத மது விற்பனை செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி பெண்கள் போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்தனர். ஜாமீனில் வெளியே வந்த அந்த நபர், புகார் கொடுத்த பெண்களை அவதூறு பேசி முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அவரை கைது செய்ய வேண்டும், இராமேஸ்வரம் தீவு பகுதியில் சட்ட விரோத மது விற்பனையை நிரந்தரமாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..